தலிபான்கள் பாணியில் இளைஞர் கொலை!! -விவசாயிகள் போராட்ட களம் அருகே பரபரப்பு-

ஆசிரியர் - Editor II
தலிபான்கள் பாணியில் இளைஞர் கொலை!! -விவசாயிகள் போராட்ட களம் அருகே பரபரப்பு-

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இடத்தின் அருகில் கை இல்லாமல் இறந்தவர் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் குண்ட்லி என்ற இடத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை போராட்டம் நடைபெற்ற இடம் அருகில் ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது தடுப்பிற்காக வைக்கப்பட்டிருக்கும் இரும்பு தடுப்புக் கம்பியில் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டனர். 

அவரின் ஒரு கை வெட்டப்பட்டிருந்தது. பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு