அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீவிபத்து!! -தாய்வானில் 46 பேர் உடல் கருகிப் பலி-

ஆசிரியர் - Editor II
அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீவிபத்து!! -தாய்வானில் 46 பேர் உடல் கருகிப் பலி-

தாய்வான் நாட்டின் காவோஷியங் நகரில் உள்ள 13 மாடி கட்டடத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்ததுடன், 41 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

யான்செங் மாவட்டத்தில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் 4 மணி நேரங்களுக்கு மேலாகக் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீப்பரவலைத் தொடர்ந்து கட்டடத்தில் இடம்பெற்ற தேடுதலின்போது இறந்த 46 பேரில் உடல்கள் மீட்கப்பட்டதாக காவோஷியங் தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பற்றி எரிந்த பழைமையான கட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பாவனையின்றிக் கைவிடப்பட்டிருந்ததாக கௌஷியாங் நகர மேயர் சென் சி-மாய் தெரிவித்துள்ளார். இக்கட்டத்தில் முன்னர் உணவகங்கள், திரையரங்கு உள்ளிட்டவை இருந்தன. தீ விபத்துக்காக காரணம் என்ன? என்பது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு