யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற காத்திருப்போருக்கு பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற காத்திருப்போருக்கு பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..!

கொரோனா தொற்று பரவல் அபாயம் காரணமாக வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற சாதாரண நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறலாம். என பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தொிவித்திருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தி கொரோனா பரவல் அபாயம் தற்சமயம் ஓரளவு குறைவடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் வழக்குத் திரும்பி கொண்டிருக்கின்றது.

வைத்தியசாலையின் கொரோனா விடுதிகளில் நாளொன்றுக்கு 30 க்குக் குறைவான நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்ற நிலையில் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் கொரோனா பரவல் அபாய நிலைமை காரணமாக வைத்தியசாலைக்கு செல்லாத சாதாரண நோயாளர்கள் மற்றும் நோய்களுக்காக மருந்துகளைப் பெற்றுக் கொண்டிருப்போர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளைப் பெற முடியும். 

என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு