ஆட்டோ மீது மின்சாரசபையின் கனரக வாகனம் மோதி கோர விபத்து..! இருவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
ஆட்டோ மீது மின்சாரசபையின் கனரக வாகனம் மோதி கோர விபத்து..! இருவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

கிளிநொச்சி - பளை முல்லையடி பகுதியில் ஆட்டோ மீது மின்சாரசபைக்கு சொந்தமான கனரக வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சியிலிருந்து வடமராட்சி நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது யாழ்ப்பாணத்திலிருந்து மின் கம்பங்கள் 

கொண்டு சென்ற கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. வீதியால் பயணித்த மற்றொரு வாகனத்தை முந்திச் செல்வதற்கு முயற்சித்தபோதே இந்த விபத்து நடந்துள்ளது. 

சம்பவத்தில் நெல்லியடி கரவெட்டியை சேர்ந்த மகாதேவன் மதுசன் (வயது21) என்பவரும் ஆட்டோவில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு