யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் கடப்படையினர் அதிரடி..! 23 இந்திய மீனவர்கள் கைது, இரு படகுகள் கைப்பற்றப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் கடப்படையினர் அதிரடி..! 23 இந்திய மீனவர்கள் கைது, இரு படகுகள் கைப்பற்றப்பட்டது..

யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டிருந்த 23 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், இரு ரோலர் படகுகளை கைப்பற்றியுள்ளனர். 

நேற்று இரவு பருத்தித்துறை கடலில் இந்திய இழுவை படகுகளை சுற்றிவளைத்த கடற்படையினர் அதிரடி நடவடிக்கையாக 23 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். 

நேற்றய தினம் காலை பருத்தித்துறை கடலில் இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றிருந்த நிலையில் மாலையில் கடற்படையினர் இந்த நடவடிக்கையினை

எடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், 

அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு