யாழ்.காரைநகரில் 3 குடும்பங்களில், 5 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு தொற்று!

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் 3 குடும்பங்களில், 5 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு தொற்று!

யாழ்.காரைநகர் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள 3 குடும்பங்களை சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த 11 போில் 5 பேர் சிறுவர்கள் என சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

காரைநகரில் 18 பேரிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி 5 குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் என 

3 குடும்பங்களை சேர்ந்த 11 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு