3 வயது, 2 வயது குழந்தைகள் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
3 வயது, 2 வயது குழந்தைகள் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 வயது மற்றும் 2 வயது குழந்தைகள் இருவர் உட்பட வடமாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 151 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி வவுனியா மாவட்டத்தில் 3 வயதான ஆண் குழந்தை உட்பட 8 பேருக்கும், யாழ்.மாவட்டத்தில் 2 வயதும் 10 மாதங்களுமான பெண் குழந்தை உட்பட 7 பேருக்கும், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேருக்கும், மன்னார் வைத்தியசாலையில் 6 பேருக்கும், கிளிநொச்சியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு