யாழ்.இணுவிலில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தையிட்டில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு! ஒருவர் கைது....

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவிலில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தையிட்டில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு! ஒருவர் கைது....

யாழ்.இணுவில் பகுதியில் களவாடப்பட்ட தங்க நகைகளை தையிட்டிப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மையில் இணுவில் பகுதியில் சுமார் 22 பவுன் பெறுமதியான தங்க நகைகள் களவாடிச் செல்லப்பட்டது.

இந்நிலையில் களவாடப்பட்ட சில நகைகள் அண்மையில் மீட்கப்பட்ட நிலையில் திருட்டில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் மீதி நகைகளுடன் தலைமறைவாகி இருந்தார் 

இந்நிலையில் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தையிட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் 

நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய நகைகளுடன்  பிரதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு