யாழ்.மாவட்ட மக்களுக்கான குடிநீர் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிகழ்நிலையில் ஆரம்பித்து வைத்தார்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கான குடிநீர் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிகழ்நிலையில் ஆரம்பித்து வைத்தார்...

யாழ்.மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நயினாதீவில் கடல்நீரை நன்னீராக்கும் இயந்திரம் உத்தியோகபூர்வமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களினால் இன்றைய தினம் புதன்கிழமை காலை மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

 நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிலையம் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்

கிளிநொச்சி - யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் ஆகிய திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய 

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆலோசனைக்கிணங்க, யாழ் நகர குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் நயினாதீவு நீர் வழங்கல் திட்டம் என்பன உருவாக்கப்பட்டன.

நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளின் 6 கிராம சேவகர்கள் பிரிவுகளில் வசிக்கும் 5000 க்கும் அதிகமான பாவனையாளர்கள் சுத்தமான குடிநீரினை பெறவுள்ளனர். 

அத்துடன் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக முதல் கட்டமாக சுமார் 300,000 மக்கள் குடிநீரை பெறும் நோக்கில், யாழ் நகர பிரதேசங்களில் 822 கி.மீ தூரத்திற்கு நீர்க்குழாய்கள் அமைக்கப்படவுள்ளன.

இந் நிகழ்வில் கிராமிய பிரதேச குடிநீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, வடமாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ் , யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கஜன் இராமநாதன்,

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், வட மாகாண நீர்பாசன திணைக்கள  பணிப்பாளர் எஸ். பாரதிதாசன் என பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு