யாழ்.சாவகச்சோி நகரில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது மோதிய பட்டா! முதியவர் பலி, பொலிஸார் விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி நகரில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது மோதிய பட்டா! முதியவர் பலி, பொலிஸார் விசாரணை..

யாழ்.சாவகச்சோியில் சைக்கிளில் சென்றவர் மீது பட்டா வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்ற வயோதிபர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் சாவகச்சோி நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த நடராசா பொன்னுசாமி (வயது 64) என்பவரே உயிரிழந்தார்.

வீதியோரத்தில் தரித்து நின்ற வாகனத்தை சைக்கிளில் முதியவர் விலகிச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த பட்டா வாகனம் அவரை மோதியதாகவும் 

இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த விபத்துக் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு