காத்தான்குடியை சேர்ந்த குடும்பஸ்த்தர் யாழ்.அச்சுவேலியில் சடலமாக மீட்கப்பட்டார்!

ஆசிரியர் - Editor I
காத்தான்குடியை சேர்ந்த குடும்பஸ்த்தர் யாழ்.அச்சுவேலியில் சடலமாக மீட்கப்பட்டார்!

யாழ்.அச்சுவேலி நகரில் வாடகைக்கு தங்கியிருந்து உணவகம் ஒன்றில் பணியாற்றும்  காத்தான்குடியை சேர்ந்த குடும்பஸ்த்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் (வயது- 46) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அவர் அறையிலிருந்து வெளியில் வராத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு