யாழ்.ஊரெழு பொக்கணையில் பொலிஸார் துப்பாக்கி சூடு..! இளைஞர் குழுவுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊரெழு பொக்கணையில் பொலிஸார் துப்பாக்கி சூடு..! இளைஞர் குழுவுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்கம்..

யாழ்.ஊரெழு - பொக்கணை பகுதியில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததை தொடர்ந்து இளைஞர் குழு கூடியதால் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருக்கின்றனர். 

இரவு 8 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பொக்கணை முருகன் கோயில் பகுதியில் சுன்னாகம் பொலிஸார் மதுபதையில் வீதியில் நின்ற இளைஞனை வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பிரதேசசபை உறுப்பினர் பொலிஸாரினுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றார். அவருடன் இருந்த இளைஞர் குழுவும் தர்க்கத்தில் ஈடுபட்டதால் பொலிஸாருக்கும் இளைஞர் குழுவுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது. மேலும் உறுப்பினர் தன்னை பிரதேசசபை உறுப்பினர் என கூறி பல தடவைகள் பொலிஸாரின் கடமைக்கு

இடையூறு விளைவித்ததாகவும் பொலிஸார் தரப்பில் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு