கொரோனாவிற்கு புதிய மருந்து!! -அமெரிக்கா கண்டுபிடிப்பு-

ஆசிரியர் - Editor II
கொரோனாவிற்கு புதிய மருந்து!! -அமெரிக்கா கண்டுபிடிப்பு-

அமெரிக்கா நாட்டில் நடத்தப்பட்ட கடுமையான ஆய்வுகளையடுத்து கொரோனா வைரஸ் உறுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய புதிய மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள குறித்த மருந்து கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் இறப்புகள் மற்றும் அபாயத்தை குறைப்பதாகத் தெரியவந்துள்ளது.

அமெரிக்க மருத்துவ தரப்பினர் முன்னெடுத்த இடைக்கால மருத்துவ ஆய்வு நடவடிக்கைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மோல்னுபிரவீர் (அழடnரிசையஎசை) என்ற குறித்த மருந்து வில்லை கொவிட் நோயாளர்களுக்கு நாளாந்தம் 2 முறை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அவசர பயன்பாட்டுக்கான அனுமதிக்காக இந்த மருந்து முன்வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு