யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களில் இரு பாரிய குடிநீர் திட்டங்களை ஆரம்பிக்க 6ம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார் பிரதமர்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களில் இரு பாரிய குடிநீர் திட்டங்களை ஆரம்பிக்க 6ம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார் பிரதமர்..

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி (பளை) பகுதியில் 24000m3 மூலம் 3 இலட்சம் மக்கள் (60,000 குடும்பங்களுக்கு) பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர் திட்டங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒக்டோபர் 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார். 

ஆரம்பிக்கப்படும் திட்டங்கள், SWRO உப்புநீக்கும் ஆலைபிரிவு, இது தாழையடியில் கட்டப்படும் மற்றும் இது நயினாதீவில் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட நீர் வழங்கல் திட்டம் ஆகும். இந்த திட்டம் இப்போது 5000 பயனாளிகளுக்கு பாதுகாப்பான நீரை வழங்கும். 

மேலும் யாழ்.நகர நீர் விநியோகத் திட்டமும் விரைவில் தொடங்கும், இதில் ஒரு இலட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய JKWSSP ( Jaffna Kilinochchi Water Supply and Sanitation Project) இன் கீழ் 284 கி.மீக்கு நீளமுள்ள குழாய்களை அமைப்பதில் அடங்கும். 

யாழ்.நகர நீர் விநியோகம் மற்றும் தாழையடி SWRO 2023 க்குள் முடிக்கப்பட்டு 3 இலட்சம் பயனாளிகளுக்கு சுத்தமான நீர் வழங்கப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு