வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்!!

ஆசிரியர் - Editor II
வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்!!

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் 8 ஆவது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் நடந்தது. இதில் மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து விவாதம் நடத்த சபாநாயகர் காகேரி அனுமதி வழங்கினார். இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் குறித்த விவரங்களை எடுத்து கூறி பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது சித்தராமையாவின் வேட்டி திடீரென்று அவிழ்ந்து கீழே இறங்கியது. இதை கவனிக்காமல் சித்தராமையா தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

அவரது வேட்டி அவிழ்ந்ததை அதே வரிசையில் அமர்ந்திருந்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கவனித்துள்ளார். அதை சித்தராமையாவே உணர்ந்து சரிசெய்வார் என்று சிறிது நேரம் காத்திருந்தார். ஆனால் சித்தராமையா அதை கவனிக்காமல் பேசியபடி இருந்தார். இதையடுத்து டி.கே.சிவக்குமார், தனது இருக்கையை விட்டு எழுந்து சித்தராமையாவின் காது அருகில் வந்து, உங்கள் வேட்டி அவிழ்ந்துள்ளது என்று மெல்லிய குரலில் கூறினார்.

உடனே இருக்கையில் அமர்ந்த சித்தராமையா, வேட்டி கழன்றுள்ளது என்று கூறி அவிழ்ந்த வேட்டியை மீண்டும் சரிசெய்தார். அப்போது சபையில் இருந்த உறுப்பினர்கள் சிரித்து கேலி செய்தனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு