குரங்கிடம் 3 நாட்களாக சிக்கி படாதபாடு பட்ட நாய்க் குட்டி!! -பாதுகாப்பாக மீட்ட மக்கள்-

ஆசிரியர் - Editor II
குரங்கிடம் 3 நாட்களாக சிக்கி படாதபாடு பட்ட நாய்க் குட்டி!! -பாதுகாப்பாக மீட்ட மக்கள்-

மலேசியா நாட்டில் குரங்கு ஒன்றிடம் சிக்கி 3 நாட்களாக படாதபாடு பட்ட நாய்க் குட்டி பொது மக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

தாமன் லஸ்டரி புத்ரா என்ற இடத்தில் பிறந்து இரு வாரங்களேயான நாய்க்குட்டி ஒன்றை வனப்பகுதியில் இருந்து வந்த குரங்கு தூக்கிச் சென்றது. இதனைக் கண்ட பொதுமக்கள் குரங்கை விரட்டினர்.

மரத்திற்கு மரம், மின்கம்பம் என 3 நாட்களாக சுற்றித் திரிந்த குரங்கை பொதுமக்களும் அவ்வப்போது விரட்டி வந்தனர். இறுதியில் குற்றுயிரும் குலையுயிருமான நிலையில் நாய்க் குட்டியை குரங்கு கைவிட்டது. இதன் பின்னரே நாய்குட்டியை பொதுமக்கள் மீட்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு