மாணவர்களின் வாட்சப் குழுவில் திடீரென வந்த ஆபாச வீடியோ!! -விசாரணையில் ஒருவர் கைது-

ஆசிரியர் - Editor II
மாணவர்களின் வாட்சப் குழுவில் திடீரென வந்த ஆபாச வீடியோ!! -விசாரணையில் ஒருவர் கைது-

சென்னையில் பாடசாலை மாணவர்களுக்காக கற்றல் செயற்பாடுகள் நடக்கும் வாட்சப் குழுவில் ஆபாச வீடியோவை பகிர்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அங்குள்ள ஆதிதிராவிடர் உயர்நிலைப் பாடசாலையில் கல்வி பயிலும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வகுப்புகளுக்கு என வாட்சப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று வழக்கம்போல் இணைய வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென குழுவில் ஆபாச வீடியோ ஒன்று வந்துள்ளது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கொடுத்த முறைப்பாட்டின்படி விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் இணைய வகுப்பில் பங்கேற்ற மாணவர் ஒருவரின் உறவினரான பசுபதி என்பவன் மாணவரிடமிருந்து கைபேசியை வாங்கி வீடியோவை பகிர்ந்ததை கண்டுபிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு