ஆப்கானில் தொடரும் படுகொலைகள்!! -தலிபான்களால் சில தினங்களில் மட்டும் 20 பெர் சுட்டுக் கொலை-

ஆசிரியர் - Editor II
ஆப்கானில் தொடரும் படுகொலைகள்!! -தலிபான்களால் சில தினங்களில் மட்டும் 20 பெர் சுட்டுக் கொலை-

ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தலிபான்கள் கைப்பற்றிய பின்னரும் அங்கு பொது மக்கள் பலர் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அந்நாட்டின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக பீ.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கும், தாலிபான்களின் எதிர்ப்பு படையினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற போதிலும், அவர்கள் தாலிபான்களால் கொல்லப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பஞ்சீர் வெளியில் தாலிபான்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் கிளர்ச்சி படையினருக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரும் தாலிபான்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அவர், தாலிபான்களின் கிளர்ச்சி படையினருக்கு உதவியதாக ஆதாரங்கள் இல்லை என்ற போதிலும், கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்..


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு