பிறந்து 6 நாட்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைக்கு கொரோனா தொற்று! சிகிச்சை விடுதியில் காது குத்தும் விழா நடத்திய தாதியர்கள், நெகிழ்ச்சி சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பிறந்து 6 நாட்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைக்கு கொரோனா தொற்று! சிகிச்சை விடுதியில் காது குத்தும் விழா நடத்திய தாதியர்கள், நெகிழ்ச்சி சம்பவம்..

பிறந்து 6 நாட்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை ஒன்றுக்கு கொரோனா சிகிச்சை விடுதியில் தாதியர்கள் இணைந்து காது குத்தும் விழா நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. 

திருகோணமலையில் சிறுவர் இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டுவந்த குறித்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. 

இதனால் கடந்த ஒன்பது நாட்களாக கந்தளாய் கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று 13ஆம் திகதி அக்குழந்தைக்கு சரியாக பதினோரு மாதம் என வைத்தியசாலை அனுமதி அட்டையில் பதிவிடப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் எடுத்த குழந்தையின் நலனில் அக்கறை கொண்ட கந்தளாய் கொரோனா வைத்தியசாலை 7ம் விடுதிக்கு பொறுப்பான தாதியர்கள் 8 பேர் ஒன்றிணைந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு 

காது குத்தும் விழாவை மிகவும் குதூகலமாக கொண்டாடியதாக தெரியவந்துள்ளது. தாதிய உத்தியோகத்தர்களின் இச்செயற்பாட்டை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றவர்களும் பார்த்து மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு