ஆப்கானிஸ்தானில் இன்று வந்திறங்கிய முதல் விமானம்!!

ஆசிரியர் - Editor II
ஆப்கானிஸ்தானில் இன்று வந்திறங்கிய முதல் விமானம்!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு இன்று திங்கட்கிழமை முதல் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதும் உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான நேரடி விமான போக்குவரத்தை உடனடியாக நிறுத்தின. இந்தநில் இன்று பாகிஸ்தான் விமானம் காபூல் சென்றிருந்தது. எனினும், அதில் பயணிகளை விட விமான பணியாளர்கள் எண்ணிக்கையே அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆட்சியில் ஆப்கானக்கான முதல் வர்த்தக விமான சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறித்து பாகிஸ்தான் எயார்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில்:-

வார இறுதியில் வழக்கமான வர்த்தக விமான சேவைகளை தொடங்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இருப்பினுகும் இரு நாட்டு தலைநகரங்களுக்கும் இடையே எத்தனை விமானங்கள் இயக்கப்படும் என்பதை இப்போது கூற முடியாது என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு