வடக்கு- கிழக்கு மாகாண மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! நிலைமை மோசம்..

ஆசிரியர் - Editor I
வடக்கு- கிழக்கு மாகாண மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! நிலைமை மோசம்..

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் மரண எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்திருக்கின்றது. 

இந்நிலையில் பொதுமக்கள் மிக பொறுப்புணர்வுடன் வீதிகளில் நடமாடுவதை தவிருங்கள் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார். 

வடக்கு, கிழக்கு கொரோனா நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நோய்க்காவிகள் பொது மக்களே. 

எனவே, பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மதிக்க வேண்டும். பொதுமக்களே ஏதேனும் அத்தியாவசியத் தேவைகள் இருந்தால் மட்டும் 

வீடுகளிலிருந்து வெளியேறுங்கள். இதன் போது வீதிச் சோதனைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு நீங்கள் பயணிப்பதற்கான காரணத்தைக் கூற வேண்டியது அவசியம். 

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பயணிப்பவர்களும் உள்ளனர். எனவே, இவ்வாறானவர்களை இனங்காண்பதற்காகப் பொலிஸார் பலகேள்விகளைக் கேட்பர். 

எனவே, அதற்கான ஒத்துழைப்பை பொலிஸாருக்கு வழங்கிச் செயற்படுமாறு வடக்கு, கிழக்கு மக்களைக் கோருகிறேன் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு