விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை!! -தலை மட்டும் கண்டுபிடிப்பு-

ஆசிரியர் - Editor II
விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை!! -தலை மட்டும் கண்டுபிடிப்பு-

உத்தரபிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை அங்கு திடீரென வந்த சிறுத்தையொன்று இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். 

சம்பவ தினத்தன்று தனது மாமாவுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தையொன்று இழுத்துச் சென்றுள்ளது. இதனைத் தொடர்நது கிராம மக்கள் மற்றும் வனஜீவராசிகள் அதிகாரிகள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது சிறுமியின் தலை மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு முன்பு மற்றொரு 7 வயது குழந்தையையும் சிறுத்தை தாக்கிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் கடந்த 2 மாதங்களில் 6ற்க்கு மேற்பட்டோர் சிறுத்தையால் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு