வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த சிந்து!!

ஆசிரியர் - Editor II
வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த சிந்து!!

தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பூப்பந்து மகளிர் ஒற்றைய பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

இதன்மூலம், ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையினையும் அவர் பதிவு செய்துள்ளார். நேற்று வெண்கலப்பதக்கத்திற்கான அரையிறுதி போட்டியில், சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை, பீ.வி சிந்து எதிர்கொண்டார்.

இந்த போட்டியில், 21-13, 21-15 என்ற செட் கணக்கில் கைப்பற்றி வெண்கலப்பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2016 இல் பிரேசிலில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் பீ.வி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு