துருக்கியில் தொடர்ந்து பரவும் காட்டு தீ!! -8 பேர் பலி: 1000ற்கும் மேற்பட்டோர் காயம்-

ஆசிரியர் - Editor II
துருக்கியில் தொடர்ந்து பரவும் காட்டு தீ!! -8 பேர் பலி: 1000ற்கும் மேற்பட்டோர் காயம்-

துருக்கியில் தொடர்ந்து பரவும் காட்டுத் தீயினையினால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது அதே வேளை இதனால் ஏறத்தாள 1000 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடந்த ஒரு வார கால பகுதியினில், சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளன.

அவற்றில் பல இடங்களில் ஏற்பட்ட தீப்பரவல் உள்நாட்டு மற்றும் சர்வதேச தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எனினும், துருக்கியின் சில இடங்களில் மிகப்பாரியளவான பரப்பளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு தொடரும் வெப்பமான காலநிலை காரணமாக தீப்பவரலை கட்டுப்படுத்துவதற்கு பலத்த சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், தீப்பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தங்கியுள்ள சுற்றுலாப்பயணிகளை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு