6 மாதங்களில் வேட்டையாடப்பட்ட 249 காண்டாமிருகங்கள்!!

ஆசிரியர் - Editor II
6 மாதங்களில் வேட்டையாடப்பட்ட 249 காண்டாமிருகங்கள்!!

கடந்த 6 மாத காலப்பகுதியில் மட்டும் தென் ஆபிரிக்காவில் சட்டவிதேராமான முறையில் 249 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றாடல் மற்றும் வனத்துறை அமைச்சர் பாபரா கிறீசி தெரிவித்துள்ளார்.

கொரொனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான முடக்கல் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக மிருகங்களை வேட்டையாடுவது அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அருகிவரும் காண்டாமிருகங்களில் உலகளாவிய ரீதியாக 80 சதவீதமானவை தென் ஆபிரிக்காவில் தான் உள்ளன. காண்டாமிருகத்தின் கொம்பு அதிக பெறுமதி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காண்டாமிருகத்தின் கொம்பு உட்பட பல உடற்பாகங்களில் இருந்து பாரம்பரிய மருந்து வகைகள் தயாரிப்பதற்காக ஆசிய நாடுகளுக்கு கடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே காண்டாமிருகங்கள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 6 மாத காலப்பகுதியில் மட்டும் ரூகர் தேசிய பூங்கா பிரதேசத்தில் 132 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு