மியன்மாரில் அடுத்த வருடம் பொதுத்தேர்தல்!! -இராணுவம் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
மியன்மாரில் அடுத்த வருடம் பொதுத்தேர்தல்!! -இராணுவம் அறிவிப்பு-

இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள மியன்மாரில் அடுத்த வருடம் பொதுத்தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்தநாட்டின் இராணுவத் தளபதியும் பிரதமருமான மின் ஆங் லயின் தகவல் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

நாட்டில் உள்ள பல கட்சிகளும் பங்கேற்கும் நேர்மையானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழழை ஏற்படுத்த வேண்டும். தற்போது அமுலில் உள்ள அவசரகால நிலை  2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் தொடர்ந்து அமுலில் இருக்கும்.

மியன்மாரை கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இராணுவம் தமது கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு