ஜ.பி.எல் தொடருக்காக விரைவில் ஹசரங்கவுக்கு அழைப்பு!! -சேவாக் தெரிவிப்பு-

ஆசிரியர் - Editor II
ஜ.பி.எல் தொடருக்காக விரைவில் ஹசரங்கவுக்கு அழைப்பு!! -சேவாக் தெரிவிப்பு-

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க 2021 ஐ.பி.எல் ரி-20 தொடரின் 2 ஆம் பாதியில் மாற்று வீரராக இணைத்துக் கொள்ள பல அணியின் உரிமையாளர்களிடமிருந்து அழைப்பினை பெறுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஏற்கனவே பி.சி.சி.ஐ. அணுகி அடம் ஜாம்பாவுக்கு பதிலாக வனிந்து ஹசரங்கவை அணையில் இணைத்துக் கொள்ள கோரியிருந்தது.

ஐ.பி.எல். தொடரின் முதல் பாதியில் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனும் ரோயல் செலஞ்சர்ஸ் அணியிலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஐ.பி.எல் ரி-20 தொடரில் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் ஹசரங்கவுக்கு அதிகளவில் உள்ளதாகவும் சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு