கனடா - ஸ்காபரோவில் 2 வயது தமிழ்ச் சிறுவன் கார் மோதி மரணம்!

ஆசிரியர் - Admin
கனடா - ஸ்காபரோவில் 2 வயது தமிழ்ச் சிறுவன் கார் மோதி மரணம்!

ஸ்காபரோவில் மக்னிக்கல் அண்ட் மார்க்கம் சந்திப்பில் அமைந்துள்ள அங்காடியில் நேற்று மாலை 5 மணியளவில் நடந்த விபத்தில் இரண்டு வயது தமிழ் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மார்க்கம் வீதியால் அங்காடிக்குள் வந்த வாகனத்தோடு, அங்கடியினுள் இருந்து ஓடி வந்த சிறுவன் மோதுண்டதால் சிறுவன் உயிர் இழந்ததாக நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறினார்.

சம்பவத்தை அலைபேசி மூலம் படமாக்கி சமூகவலைத் தளத்தில் பதிவேற்ற முனைந்த ஒரு பெண் பொலிசாரால் எச்சரிக்கை செய்யப்பட்டதோடு, பதிவேற்றியதை அழிக்குப்படியும் பணிக்கப்பட்டுள்ளார்.

வாகனத்தை ஓட்டியவர் அடிபட்ட சிறுவனை பொலிஸார், அம்புலன்ஸ் வரும் வரை தூக்கி வைத்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

பொலிசார் நான்கு மணி நேரத்துக்கு மேல் விசாரணைகளை வாகன தரிப்பிடத்தில் மேற் கொண்டிருந்தனர்.

மரணமான சிறுவன் பிரசன்னாவின் பெற்றோர்கள் புங்குடுதீவை சேர்த்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு