காதலை ஏற்கமறுத்த மருத்துவ மாணவி!! -ஆத்திரத்தில் சுட்டுக் கொலை செய்த இளைஞன்-

ஆசிரியர் - Editor II
காதலை ஏற்கமறுத்த மருத்துவ மாணவி!! -ஆத்திரத்தில் சுட்டுக் கொலை செய்த இளைஞன்-

இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 24 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை சுட்க் கொண்ட இளைஞர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- கண்ணூரைச் சேர்ந்த ரக்கீல் என்பவன் குறித்த மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் நீண்ட காலமாகப் பின்தொடர்ந்துள்ளார். 

ஒரு தலையாக அந்தப் பெண்ணை காதலித்து வந்த அவர், விடுதிக்கு சென்று தோழிகளுடன் உணவருந்திய பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான்.

இதைத் தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து அந்தப் பெண்ணை பல முறை சுட்டுக் கொலை செய்த பின் தன்னையும் தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு