தொடரை வென்ற இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலர் சன்மானம்!!

ஆசிரியர் - Editor II
தொடரை வென்ற இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலர் சன்மானம்!!

இந்திய அணியுடனான ரி-20 தொடரை வெற்றி கொண்ட இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் வியாழக்கழமைம நிறைவடைந்தது. இதில் 2 - 1 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரை வென்றது. 

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில் நிறைவு பெற்ற இந்திய அணியுடனான ரி-20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து 100,000 அமெரிக்க டொலர் சன்மானம் வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தீர்மானத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு