கேரளாவில் தொற்று திடீர் அதிகரிப்பு!! -முழு ஊரடங்கு அமுல்-

ஆசிரியர் - Editor II
கேரளாவில் தொற்று திடீர் அதிகரிப்பு!! -முழு ஊரடங்கு அமுல்-

இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்படும் நிலையில் கேரளாவில் திடீரென அதிகரித்து வருகிறது. இதன்படி அங்கு கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 22,000ற்க்கும் மேல் பதிவாகி உள்ளது.

இந்தநிலையில் 6 பேர் கொண்ட குழுவை கேரளாவிற்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அங்கு சென்றுள்ள குறித்த குழு அம்மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது. 

இதற்கிடையில் கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பினை அடுத்து நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு