உலகில் கொரோனா பலி 21 சதவீதம் அதிகரிப்பு!! -எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு-

ஆசிரியர் - Editor II
உலகில் கொரோனா பலி 21 சதவீதம் அதிகரிப்பு!! -எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு-

உலகளவில் கொரோனா தொற்றின் 2 ஆவது அலை கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த வாரம் 69 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளன. கொரோனா புதிய பாதிப்புகள் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 19 கோடியே 56 இலட்சத்தை தாண்டி விட்டது.

இதேரீதியில் சென்றால், இன்னும் 2 வாரங்களில் 20 கோடியை மிஞ்சிவிடும். அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு