தமிழகத்திலிருந்து யாழ்.அல்லைப்பிட்டி கடற்பகுதி வழியாக குடாநாட்டுக்குள் நுழைந்த 4 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
தமிழகத்திலிருந்து யாழ்.அல்லைப்பிட்டி கடற்பகுதி வழியாக குடாநாட்டுக்குள் நுழைந்த 4 பேர் கைது!

இந்தியா - தமிழகத்திலிருந்து யாழ்.தீவகம் அல்லைப்பிட்டி கடல் வழியாக நுழைந்த 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய இருவர் இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 அச்சுறுத்தல் நிலை காரணமாக சந்தேகநபர்கள் காரைநகர் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு