சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! -புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதி-

ஆசிரியர் - Editor II
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! -புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதி-

சீனா நாட்டில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 50 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த ஆண்டு அதிகபட்சமாக கடந்த ஜனவரி 30 ஆம் திகதி 92 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 35 பேருக்கு அறிகுறி இல்லாத தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் அந்நாட்டில் இதுவரை தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 92,462 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு