வவுனியா பல்கலைகழகத்தின் 1வது துணைவேந்தராக கலாநிதி மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்!

ஆசிரியர் - Editor I
வவுனியா பல்கலைகழகத்தின் 1வது துணைவேந்தராக கலாநிதி மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்!

தனி பல்கலைகழகமாக மாறும் வவுனியா பல்கலைகழகத்தின் 1வது துணைவேந்தராக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கிவந்த “யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இலங்கை வவுனியா பல்கலைக் கழகம் எனத் தரமுயரும் 

என கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்களினால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு நிலையாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு