தளபதியின் பிகில் படத்தை காண்பித்து சிறுவனுக்கு சிகிச்சை!! -வைத்தியர்கள் செய்த விசித்திர செயல்-

ஆசிரியர் - Editor II
தளபதியின் பிகில் படத்தை காண்பித்து சிறுவனுக்கு சிகிச்சை!! -வைத்தியர்கள் செய்த விசித்திர செயல்-

வீதியில் மோட்டார் சைக்கிலில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்த சிறுவனுக்கு, விஜயின் பிகில் படத்தை காண்பித்து வைத்தியசர்கள் சிகிச்சை அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

இந்தியா சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிறுவன், தனது மாமா அரவிந்த் என்பவருடன் மோட்டார் சைக்கிலில் சென்றபோது கீழே விழுந்துள்ளான். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவனை ராயப்பேட்டை அரச வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், தையல் போட்ட வைத்தியர்கள் முடிவு செய்தனர். அதனால், சிறுவனுக்கு முதலில் ஊசி போடுவதற்காக வைத்தியர்கள் முயன்றனர். 

ஆனால் சிறுவன் பயத்தில், ‘ஊசி வேண்டாம்’ என அடம்பிடித்து, சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. எவ்வளவோ முயன்றும், சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால், வைத்தியர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தனர்.

அப்போது அங்கு இரவு பணியில் இருந்த ஒருவர், சிறுவனிடம் அன்பாக பேச்சு கொடுத்து, சிறுவனுக்கு பிடித்த விடயங்கள் எவை என்பதை அறிய முற்பட்டுள்ளார். 

இதன் போது குறித்த சிறுவன், தனக்கு தளபதி விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று வலியில் அழுது கொண்டே கூறியுள்ளான்.

மேலும் தளபதி விஜய்யின் படங்கள், பாடல்கள், வசனங்கள் எல்லாம் தனக்கு மனப்பாடமாக தெரியும் எனவும், காயம் ஏற்பட்ட வலி, வேதனையிலும், தளபதி விஜய்யை பற்றி சலிக்காமல் பதில் அளித்து கொண்டே இருந்தான். 

அப்போது, கைபேசியில் இருந்த விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார். படத்தை பார்த்த சிறுவன் தலையில் இரத்தம் வழிந்த நிலையிலும், மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில், வைத்தியர்கள் சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி மூலம் மருந்து செலுத்தி, தையல் போட்டுள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு