மாகாணங்களுக்கிடையில் நீடிக்கப்பட்ட பயணத்தடை! யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் நடக்கிறது பேருந்து சேவை..

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையில் நீடிக்கப்பட்ட பயணத்தடை! யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் நடக்கிறது பேருந்து சேவை..

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில், யாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையில் சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. 

எதிர்வரும் 19ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நாடளாவிய ரீதியில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கட்டுப்பாடுகளை மீறி 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக பெரும்பாலானோரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் மட்டக்களப்பு- கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபட்ட 

சொகுசு பேருந்தினை சுற்றிவலைத்த சுகாதார பிரிவினர், அதில் பயணித்தோருக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். அதில் மூவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு