யாழ்.சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வவுனியா செட்டிகுளம் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது!

ஆசிரியர் - Editor I
யாழ்.சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வவுனியா செட்டிகுளம் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது!

யாழ்.சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேசத்தில் நிவாராணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வடக்கு மாகாணம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு நிவாரணப் பணிகளின் தொடர்ச்சியாக இன்று வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திலும் 

அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேசத்தின் கணேசபுரம், கப்பாச்சி, அருவித்தோட்டம் 

மற்றும் மெனிக்பாம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 115 குடும்பங்களுக்கு தலா 3500/= ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

பிரதேச கிராம சேவையாளர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள், 

முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், சமூக ஆர்வலர் இ.தயாபரன் மற்றும் கிராம சேவையாளர்களும் இணைந்து 

மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு