பிறந்த குழந்தையை கொன்று குப்பையில் வீசிய கொடூர தாய்!! -கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக செய்த காரியம்-

ஆசிரியர் - Editor II
பிறந்த குழந்தையை கொன்று குப்பையில் வீசிய கொடூர தாய்!! -கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக செய்த காரியம்-

சமூக வலைதளத்தில் காதலித்த இளைஞருடன் சேர்ந்து வாழ்வதற்காக தான் பெற்ற குழந்தையை பிறந்தவுடன் கொன்று குப்பைக்குள் வீசிய கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவின் - திருவனந்தபுரம் அருகே உள்ள சாந்தனூர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடத்தில் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் திகதி பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது.

அந்த குழந்தையை பிறந்த சில மணி நேரத்திலேயே யாரோ வீசிசென்றுள்ளனர். இதுகுறித்து சாந்தனூர் பொலிஸார் அது யாருடைய குழந்தை? வீசிச்சென்றது யார்? என்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு பாரிப்பள்ளி அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் குறித்த குழந்தை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆகவே குழந்தையை கொன்று குப்பையில் வீசிச் சென்றது யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக இறங்கினர். குழந்தை யாருடையது என்பதை கண்டுபிடிக்க டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும் சாந்தனூர் பகுதியில் அண்மையில் யாருக்காவது குழந்தை பிறந்ததா? யாராவது கர்ப்பமாக இருந்தார்களா? என பொலிஸார் விசாரணை நடத்தினர். அதில் அந்த குழந்தை சாந்தனூர் அருகே உள்ள வேலுவிளை பகுதியை சேர்ந்த விஸ்ணு என்பவரின் மனைவியான 21 வயது ரேஸ்மா என்பவருக்கு பிறந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையின் போது, குப்பைக்குள் வீசப்பட்ட குழந்தை தன்னுடையது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு