உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலுக்கு அதிர்வு பரிசோதனை!! -நடத்தியது அமெரிக்கா கடற்படை-

ஆசிரியர் - Editor II
உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலுக்கு அதிர்வு பரிசோதனை!! -நடத்தியது அமெரிக்கா கடற்படை-

உலகின் மிகப்பெரியதும், 333 மீட்டர் நீளமுள்ளதும், புதியதுமான ருளுளு புநசயடன சு குழசன போர்க்கப்பலை முற்றுமுழுதாக பெரும் அதிர்வு சோதனைக்கு அமெரிக்கா உட்படுத்தி, அந்த சோதனையின் வீடியோ காட்சிகளை அந்நாட்டு கடற்படை வெளியிட்டுள்ளது.

அந்நாட்டின் கிழக்கு கடலில் குறித்த கப்பலுக்கு மிக அருகில் சுமார் 20 டென் வெடிமருந்துகள் வெடிக்க வைக்கப்பட்டு, அதனால் ஏற்படும் மிகப் பெரிய  அதிர்வுகளை கப்பல் தாங்கியதா என பரிசோதிக்கப்பட்டது. 

இதன் போது வெடிமருந்துகளின் தாக்கத்தால் கடல் நீர் சிறு குன்று போல மேலெழும்பியது. சவாலான அல்லது போர்க்காலங்களில் புதிய போர்க்கப்பல்களால் தாக்குபிடிக்க முடியுமா என்பதை சோதிக்க இந்த அதிர்வு சோதனை நடத்தப்பட்டதாக அமெரிக்க கடற்படையினர் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சோதனை நடத்தப்பட்ட சமயம் புளோரிடாவுக்கு கிழக்கே 161 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவையில் 3.9 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்காவின் ஜியாலஜிகல் சர்வே துறை தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் விளைவாக நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சில அந்நாட்டில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு