5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார்!! -பொலிஸ் அதிரடி கைது-

ஆசிரியர் - Editor II
5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார்!! -பொலிஸ் அதிரடி கைது-

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல், தொடர்ந்து ஐந்து பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கான்பூரில், 'பாபா' என தன்னை அடையாளம் காட்டிக்கொண்டுள்ள அனுஜ் சேட்டன் கத்தேரியா என்ற போலி சாமியார், 2005 இல், மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்திற்கு விண்ணப்பித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதன் பின், 2010 இல், பரேலியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை, அவர் திருமணம் செய்தார். இவர்களும் விவாகரத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். 

தொடர்ந்து 2014 இல் அவர் 3 ஆவது திருமணம் செய்தார். பின், மூன்றாவது மனைவியின் உறவு பெண்ணை, 4 ஆவதாக திருமணம் செய்தார். அந்த பெண், முந்தைய திருமணங்கள் குறித்து அறிந்து, தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து 2019 இல் 5 ஆவதாக அவர் மற்றுமொரு பெண்ணை திருமணம் செய்தார். அனுஜ் துன்புறுத்தியதன் காரணமாக, அவர் மீது குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். 

இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்ததை அடுத்து அவர் முறைப்படி விவாகரத்து பெறாமல் பல பெண்களை திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு