ரஸ்யாவில் மர்ம மரணமான அமெரிக்கவை சேர்ந்த 34 வயது மாணவி!!

ஆசிரியர் - Editor II
ரஸ்யாவில் மர்ம மரணமான அமெரிக்கவை சேர்ந்த 34 வயது மாணவி!!

ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலை கழகத்தில் படித்து வந்த அமெரிக்காவை சேர்ந்த 34 வயதான கேத்தரீன் செரவ் கடந்த செவ்வாய் கிழமை காணாமல் போயுள்ளார்.

இது குறித்து விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்தனர். இதன் போது குறித்த மாணவி அறிமுகம் இல்லாத நபருடன் காரில் செல்லும்போது கடைசியாக தனது தாயாருக்கு செய்தி அனுப்பியுள்ளார். 

அதில் வைத்தியசாலைக்கு செல்வதற்கு பதிலாக கார் காட்டுக்குள் சென்றுள்ளது என கூறப்படுகிறது. காட்டில் உள்ள டவரில், செரவின் தொலைபேசி அழைப்பு சென்றது பதிவாகி உள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் 40 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர் கடந்த காலங்களில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஆவார்.

இச் சம்பவம் தொடர்பான நிலைமைகளை தாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமெரிக்கா தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு