யாழ்.பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் 5 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் 5 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 5 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இடையே கொரோனா தொற்று உள்ளமை 

கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் பெறப்பட்ட மாதிரிகளில் 17 பேரின் மாதிரிகள் கடந்த வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 

மீளவும் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் 

பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.அத்துடன், பருத்தித்துறை நீதிமன்றில் பணியாற்றும் ஒருவருக்கும் 

தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை மேலும் ஐவரின் மாதிரிகளை மீளப்பெறுமாறு ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு