பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் அலைந்து திரிந்தோருக்கு நடந்த தரமான சம்பவம்..!

ஆசிரியர் - Editor I
பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் அலைந்து திரிந்தோருக்கு நடந்த தரமான சம்பவம்..!

நாடு முழவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் அம்பாறை - மருதமுனை பகுதியில் பயணத்தடையை மீறி நடமாடியவர்கள் கைகளை உயர்த்தியவாறு வீதியில் முட்டுக்காலில் அமர்த்தப்பட்டனர். 

குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் வெளியாகியிருக்கின்றது. நாடு முழவதும் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் மருதமுனை பகுதியில் வீதிகளில் நடமாடியவர்களை இராணுவத்தினர் பிடித்து 

அவர்களை தலைக்கு மேலே கைகளை தூக்கியவாறு முழங்காலில் இருக்க வைத்து தண்டனை வழங்கியுள்ளனர். இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாட்டை ஒரு சிலர் பாராட்டி பதிவுகளை இட்டிருந்தாலும் 

பெரும்பாலானோர் அதற்கு தமது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு