யாழ்.மாவட்டம் ஆபத்தான நிலையிலேயே உள்ளது! மாவட்ட செயலர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் ஆபத்தான நிலையிலேயே உள்ளது! மாவட்ட செயலர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..

யாழ்.மாவட்டம் தொடர்ந்தும் ஆபத்தான நிலையிலேயே உள்ளதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் பயணத்தடை தளர்த்தப்படும்போதும் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளார். 

மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலமைகள் தொடர்பாக நேற்ற மாலை ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மாவட்டத்தில் தற்போதும் 1754 குடும்பங்களைச் சேர்ந்த 

5613 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4668 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் 63 ஆக கொரோராண மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 

இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணிக்கு நீக்கப்படுகிறது.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை காணப்படும் என்ற நிபந்தனையுடன் தான் பயணத்தடை தளர்த்தப்படவுள்ளது.ப யணத்தடை தளர்த்தப்படும்போது அவசியமான தேவைகளுக்கு மாத்திரம் பொதுமக்களை வெளியில் செல்லுமாறு 

நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு தொடர்ந்தும் தடை காணப்படுகின்றது.நாளாந்த தொற்று நிலைகளில் யாழ் மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்கவில்லை.

எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு