யாழ்.குருவிக்காட்டில் கொடிகட்டிப் பறக்கும் கசிப்பு வியாபாரம்.. 35 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருவிக்காட்டில் கொடிகட்டிப் பறக்கும் கசிப்பு வியாபாரம்.. 35 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது..

நாட்டில் தற்போது பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் சரசாலை - குருவிக்காடு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நிலையம் மதுவரித் திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது 150,000 ml கோடா மற்றும் 35,000 ml கசிப்பு அடங்கலாக கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக 

மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் பல நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளமை சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய உதவி மது வரி ஆணையாளர் க.தர்மசீலன் அவர்களது அறிவுறுத்தலுக்கு அமைய, மது வரி அத்தியட்சகர் ரி.தங்கராசா, சாவகச்சேரி மதுவரி அதிகாரி த.அசோகரத்தினம் ஆகியோரின் வழி நடத்தலில் குறித்த சுற்றிவளைப்பை 

சாவகச்சேரி மது வரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர்.சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு