யாழ்.அனலைதீவு - கரம்பன் ஊடாக கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினால் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.அனலைதீவு - கரம்பன் ஊடாக கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினால் கைது!

யாழ்.அனலைதீவு - கரம்பன் பகுதி ஊடாக கஞ்சா கடத்திவந்த இருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டிரக்கின்றனர். 

இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

அனலைதீவு கடல் பகுதியால் இருவர் கஞ்சா கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, 

அவர்கள் கடலில் வைத்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த கஞ்சாப் பொதிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் கைது செய்யப்பட்ட 26 மற்றும் 31 வயதுகள் கொண்டவர்களில் ஒருவர் மன்னாரையும் மற்றையவர் அனலைதீவு பகுதியையும் சேர்ந்தவர்கள்.

கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு