யாழ்.பண்டத்தரிப்பில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு! 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, திருமண வீட்டாருக்கு மேலும் 14 நாள் தனிமைப்படுத்தல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்டத்தரிப்பில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு! 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, திருமண வீட்டாருக்கு மேலும் 14 நாள் தனிமைப்படுத்தல்..

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பில் கடந்த 4ம் திகதி சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டில் திருமண நிகழ்வை நடத்தியவர்கள் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு, 

தனிமைப்படுத்தப்பட்டதுடன், பீ.சி.ஆர் பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் 78 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்த நிலையில் 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இதனையடுத்து குறித்த 13 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் திருமண வீட்டாரை மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு