யாழ்.நல்லுார் - அரசடி பிரதேசம் தனிமைப்படுத்தல் முடக்கலில் இருந்து இன்று காலை விடுவிக்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் - அரசடி பிரதேசம் தனிமைப்படுத்தல் முடக்கலில் இருந்து இன்று காலை விடுவிக்கப்படுகிறது..

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து முடக்கப்பட்டிருந்த நல்லுார் அரசடி பகுதி இன்று காலை முடக்கலில் இருந்து விலக்கப்படவுள்ளது. 

கடந்த 28ம் திகதி தொடக்கம் முடக்கப்பட்டிருந்த மேற்படி பகுதி இன்று காலை முடக்கலில் இருந்து விலக்கப்படும் என மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

அதிகளவனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசம் முடக்கப்பட்டதுடன், கடந்த 5ம் திகதி நடத்தப்பட்ட 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலும் 

55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முடக்கல் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பிரதேசம் முடக்கலில் இருந்து விலக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு