துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் மரணம்..! யாழ்.புத்துார் - நிலாவரை பகுதியில் இன்று காலை சம்பவம்..

ஆசிரியர் - Editor I
துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் மரணம்..! யாழ்.புத்துார் - நிலாவரை பகுதியில் இன்று காலை சம்பவம்..

யாழ்.புத்துார் - நிலவரை பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வந்த நவர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 37 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் வந்தபோது திடீர் சுகயீனமடைந்துள்ளார். இதனையடுத்து வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

ஆனாலும் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு